Vanitha Pathippagam

  • vanithapathippagam@gmail.com
  • 044-42070663
  • No.11, Nana Street, Pondy Bazzar, T.Nagar, Chennai - 17

எங்கள் நிறுவனம் பற்றி…

1978ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் அவர்களால் துவக்கப்பட்ட வனிதா பதிப்பகம், 3000த்திற்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டுள்ளது. தமிழக அரசால் சிறந்த நூலுக்கான விருது, திருப்பூர் தமிழ் சங்க விருது, நெய்வேலி நிக்லைட் கார்ப்பரேட் விருது போன்ற எண்ணற்ற விருதுகளை பெற்ற பதிப்பகம். பல பெண் எழுத்தாளர்களையும், இளம் படைப்பாளர்கள் பலரை உலகுக்கு அறிமுகம் செய்துள்ளோம். உங்கள் நூலை உலக அரங்கில் கொண்டு செல்ல இன்றே எங்கள் நிறுவனம் மூலம் வெளியிடுங்கள்…


புத்தகத்தை நாங்களே வெளியிட…

தங்களின் எழுத்துப் பிரதிகளை (Xerox Copy) எங்களின் ஆசிரியர் குழுவில் கொடுத்து அவர்கள் புத்தகத்தை படித்து பார்த்து ஆசிரியர் குழு பதிப்பிப்பதற்கு ஒப்பம் வழங்கினால், அப்புத்தகத்தை நாங்களே வெளியிடுவோம். அப்புத்தக ஆசிரியருக்கு ராயல்டியாகவோ அல்லது ஒரே தொகையாகவோ கொடுத்து அப்புத்தகத்தை நாங்களே வெளியிடுவோம். இந்த நடைமுறைக்கு குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு மேலாகும். ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது.


எழுத்தாளர் - பதிப்பாளர் புத்தக வெளியீட்டு திட்டம் :

ஒரு புத்தகத்தை சிறப்பான முறையில் வெளிடத் தாங்களும், நாங்களும் சேர்ந்து தொகையை முதலீடு செய்து நூலை வெளியிடுவது இத்திட்டத்தின் சிறப்பு.


எங்கள் மூலம் ஏன் புத்தகத்தை வெளியிட வேண்டும்?

ஓர் எழுத்தாளர் தனிப்பட்ட முறையில் ஒரு புத்தகத்தை வெளியிடுவதில் நிறைய நடைமுறைச் சிரமங்கள் உள்ளன. அப்படியே வெளியிட்டாலும் விற்பனை செய்வது மிகவும் கடினம். ஆனால் 43 வருட அனுபவமுள்ள வனிதா பதிப்பகம் இப்பணியை மிகச் சிறப்பாகச் செய்ய முடியும். காரணம், எங்கள் காட்சிக்கூடத்திலும், தபால் மூலமும், புத்தக விற்பனையாளர்கள் மூலமும், நூல் விற்பனை நிலையங்கள் மூலமும், மின் இணையம் (Website) மூலமும், உள்நாட்டு - வெளிநாட்டுப் புத்தக விற்பனைக் கண்காட்சிகள் மூலமும், ஏற்றுமதியாளர்கள் மூலமும் எங்களால் விற்பனையை மிகச் சிறப்பாகச் செய்ய முடிவதுதான்!


புத்தக வெளியீட்டில் வெற்றி :

சந்தேகமில்லாமல்! நூற்றுக்கணக்கான நூல்கள் இத்திட்டத்தின் கீழ்வெளிவந்து அரசுப் பொது நூலக இயக்கத்தால் வாங்கப்பட்டு, ஏராளமான விருதுகளை பெற்றுள்ளன.


புத்தகம் வெளியிட…

எல்லா நூல்களையும் DTP செய்து ஆப்செட் முறையில் அச்சிடுகிறோம். இதற்குத் தங்களின் பங்களிப்பாக ரூ.16,000ம் முதலீடு செய்யவேண்டும். சற்றுப் பெரிய அளவான (14x21செ.மீ) டெம்மி சைஸ் எனில் ரூ.22,000, 112 இருக்க வேண்டும். ஒவ்வொரு கூடுதல் 16 பக்கங்களுக்கும் ரூ.1,800 வீதம் செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் 64 பக்கங்கள் இருக்க வேண்டும். நூலின் அளவு கிரெளன் (12x18 செ.மீ) அளவில் 112 இருக்க வேண்டும். தங்களின் பங்களிப்பு ரூ.16,000 ஒருவேளை குறிப்பிட்ட பக்கங்களைவிட கூடுதலானால் ஒவ்வொரு 16 பக்கங்களுக்கும் ரூ.1,500 வீதம் செலுத்த வேண்டும். பக்கங்கள் குறைவதால் தொகை குறையாது. காரணம். அடிப்படையான வண்ண அட்டைப்படம்; அச்சுக்கூலி; நூல் தயாரிப்பு; உழைப்பு போன்றவற்றில் பெரிய மாறுதல்கள் ஏற்படுவதில்லை என்பதுதான்!


எவ்வளவு பிரதிகள் வெளியிடப்படும்…

கவிதைகள், சிறுகதை, கட்டுரை, நாவல் ஆகிய தலைப்புகளில் அச்சிடப்படும். 1500 பிரதிகளுள், அரசுப் பொது நூலகங்கள், கன்னிமாரா நூல் நிலையம் உட்பட இந்தியாவில் உள்ள 7 முக்கிய நூலகங்களுக்கும் மாதிரிப் பிரதிகள் அனுப்பப்படுகின்றன. பல்வேறு தினசரி, வார, மாதப் பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் ஆகியவற்றிற்கு புத்தக மதிப்புரை அனுப்புகிறோம். 400 பிரதிகளைத் தங்களுக்குத் தருகிறோம். நூல்களைப் பெற்றுகொள்ள ஆகும் செலவு நூலாசிரியரைச் சேர்ந்தது ஆகும். மீதிப் பிரதிகளின் வரவுத் தொகை நூல் வெளியிட நாங்கள் செலவழித்தத் தொகை, விளம்பரச் செலவு மற்றும் எங்கள் உழைப்பிற்காக எங்களைச் சேர்ந்ததாகிறது. பொது நூலகத் துறையிலும், தமிழகத்தில் நடைபெறுகின்ற அனைத்து புத்தகக் கண்காட்சியிலும் அனைத்து புத்தகக் கடைகளிலும் ஆன்லைன் விற்பனை என உங்கள் புத்தகங்கள் மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கான பணிகளை எங்கள் பதிப்பகம் மேற்கொள்ளும்.


குறைந்த செலவில் புத்தகம் வெளியிட :

இந்த அச்சு முறையில் குறைவான பிரதிகளை அச்சிட்டு, ஆசிரியருக்கு 100 பிரதிகள் தரலாம். தங்கள் பங்குத்தொகை டெம்மி சைஸாக (14ஒ21 செ.மீ) 128 பக்கம் இருந்தால் ரூ.14,000ம் ஆகும். பக்கங்கள் அதிகமானால், கூடுதல் ஒவ்வொரு 16 பக்கங்களுக்கும் ரூ.1300ம் ஆகும்.


SUBSCRIBE TO OUR NEWS LETTER

Enter your e-mail address to receive regular updates, as well as news on upcoming events and special offers.